சினிமா

சூர்யாவுடன் இணைந்த சிவகார்த்திகேயன்… வெளியானது சூப்பர் அப்டேட்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சூர்யா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ALSO READ  இந்துஜா இத்தனை அழகா.. யம்மாடி..

இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘வாடா தம்பி…’ 2வது சிங்கிள் உள்ளம் உருகுதய்யா.. ஆகிய பாடல்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் அடுத்த பாடலை ஜனவரி 16 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளது. ‘சும்மா சுர்ருனு’ என தொடங்க உள்ள அந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். ஏற்கனவே பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் பாடியுள்ள நிலையில், தற்போது பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ளதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாளுக்கு நாள் வசூலில் சாதனை படைத்தது வரும் மாஸ்டர் :

naveen santhakumar

“இரும்புப் பெட்டிகளைப் போலவே இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது”

Shanthi

ரசிகர்கள் உடன் சிறப்பு காட்சியை கண்டுகளித்த ரஜினிக்குடும்பத்தினர்

Admin