‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ 2-ம் பாகம் எடுக்கவே கூடாது என்று சிவகார்த்திகேயன் கூறிய நிலையில், “வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பார்ட் 2 வருவது உறுதி என்று இயக்குநர் பொன்ராம் கூறியுள்ளார்.
பொன்ராம் இயக்கத்தில் 2013 இல் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் சாதாரண ஹீரோவாக இருந்த சிவகார்த்திகேயனை, மாஸ் ஹீரோவாக்கி அவரது திரைப்பாதையை தீர்மானித்த படம்.
சிவகார்த்திகேயன் -சூரி-சத்யராஜ் கூட்டணி காமெடியில் அதகளப்படுத்தியிருப்பார்கள். பலருக்கும் ஃபேவரைட் படமாக உள்ளது. பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணியில் ரஜினி முருகன், சீமராஜா படங்கள் வந்தாலும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஒரு பென்ச் மார்க்காகவே உள்ளது.
அண்மையில், ‘டாக்டர்’ படத்தின் வெளியீடு குறித்த பத்திரிகையாளர் கேள்வியின்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ வருமா?” என்றக் கேள்விக்கு ”’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இரண்டாம் பாகம் எடுக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
அது ஒரு எபிக் படம். நாங்கள் எங்களையே அறியாமல் ஜாலியாக எடுத்த படம். அதைத் திரும்ப எடுக்கவே முடியாது என்றுக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பார்ட் 2 வருவது உறுதி, சிவகார்த்திகேயன் சார் மெச்சூரிட்டி (maturity) ஆகிவிட்டார், அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் எடுப்போம். போட்றா வெடிய என்று பதிலடி கொடுத்திருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.