சென்னை:
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் மூன்றாவது நாளான இன்றும் சண்டைக்கு பஞ்சமில்லை என்றே தான் சொல்ல வேண்டும். அனிதா – சுரேஷ் இருவரும் நேற்றிலிருந்து முட்டிக்கொண்டிருக்கின்றனர்.
நியூஸ் ரீடர் குறித்து தவறாக பேசியதாக அனிதா குற்றம் சொல்ல,அதை மறுத்த சுரேஷ் பதிலுக்கு அனிதாவுடன் சண்டையிட்டார் . பின்பு அனிதாவே மன்னிப்பு கேட்டு இருவரும் பேசிய பிறகும் இன்றும் அவர்களின் சண்டை தொடர்கிறது.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோவில், அனிதா சம்பத்-சோம் சேகரிடம், ஒரு வார்த்தை எக்ஸ்ட்ரா சொல்லிட்டேனாம்.வேற ஏதும் கூட சொல்லியிருக்கட்டும், எனக்கு மீனிங் அப்படி தான் இருந்துச்சி, உடனே அத புடிச்சிகிட்டாரு, நான் நியூஸ் ரீடர் வார்த்தையை சொல்லல, குறும்படம் குறும்படம்னு.
ஓகே நீங்க நியூஸ் ரீடர் சொல்லல…… எச்சில் தெறிக்கும்னு சொன்னீங்கள்ள….. மக்கள் அதெல்லாம் மறந்துடுவாங்க. எனக்கு தேவையில்லாத கெட்ட பேரு. அவர் என்ன வேணும்னே ட்ரிகர் பண்ணுறாரு என்று ஆதங்கமாக பேசும்படியாக ப்ரோமோ முடிந்துள்ளது.