இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் நடிகர் கார்த்தியை வைத்து “சுல்தான்” என்ற புதிய படத்தினை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அவரை தொடர்ந்து யோகி பாபு, பொன்னப்பாலம் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கார்த்தியின் 19 வது படமாக உருவாகும் இப்படத்தினை எஸ்.ஆர் பிரபு தயாரிக்கிறார். சுல்தான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடைந்த நிலையில், இதன் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து பிப்ரவரி 11 ஆம் படத்தின் முதல் பாடலான “ஜெய் சுல்தான்” பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் அண்மையில் வெளியான படத்தின் இரண்டாம் பாடலான “யாரையும் இவ்ளோ அழகா…” பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தற்போது ‘எப்படி இருந்த நாங்க’ என்ற 3வது சிங்கிள் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.