நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 39வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி மேல் இன்ப அதிர்ச்சியாக அவரது படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
நேற்று அவர் நடித்து வந்த 40வது திரைப்படத்தின் டைட்டில் ’எதற்கும் துணிந்தவன்’ என்று அறிவிக்கப்பட்டது என்பதும் அதனை அடுத்து நள்ளிரவில் அந்த படத்தின் இரண்டாவது லுக் மற்றும் இன்று அந்த படத்தின் மூன்றாவது லுக் வெளி வந்தது.
இந்நிலையில் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு சூர்யாவின் 39வது படத்திற்கு ஜெய்பீம் என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இப்படத்தை ஞானவேல் இயக்குகிறார். இந்த படத்தை 2டி என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.