நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சூரரைப் போற்று’. ஓடிடி தளத்தில் வெளியாகியது. அதனையடுத்து இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ‘சூர்யா 40’ எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளார். இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா 40 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் பலர் நடிக்கவுள்ளனர். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். நடிகர் சூர்யா கொரோனா சிகிச்சைக்கு பின் ஓய்வு எடுத்து வருவதால் நடிகர் சூர்யா படபிளில் கலந்து கொள்ள வில்லை.
இந்நிலையில் சூர்யா முழுவதும் குணமடைந்துள்ளதால் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். தான் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டதை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனையறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சில் இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.