மும்பை:-
கொரானோ ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடந்த தமன்னா தற்பொழுது மலையேற்றத்துக்கு கிளம்பியுள்ளார்.
தமன்னா கொரானோ ஊரடங்கில் தன் மும்பை வீட்டில் பெற்றோருடன் உள்ளார். தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டத்தில் உள்ள அசங்கான் (Asangaon) மகுலி காட் (Mahuli Ghat) மலையில் மலையேற்றத்திற்கு சென்றுள்ளார்.
முதுகில் ஒரு பையுடன் கருப்பு நிற டீசர்ட் மற்றும் கருப்பு நிற ட்ராக்ஸ் அணிந்து கொண்டு காட்டுக்குள் அவர் பயணிக்கும் புகைப்படம் ஒன்றைப் இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ளார்.
மேலும், “இயற்கையில் தொலைந்து போங்கள், உங்களை நீங்களே கண்டுபிடியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமன்னா அடுத்ததாக நவாசுதீன் சித்திக் (Nawazuddin Siddiqui) உடன் ஷாமஸ் நவாப் சித்திக் (Shamas Nawab Siddiqui) இயக்கத்தில் போல் சூடியான் (Bole Chudiyan) என்று பெயரிடப்பட்ட படத்தில் நடிக்கிறார்.