கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தியேட்டர்கள் மூடப்பட்டன. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் ஊரடங்கை கொஞ்சம் கொஞ்சமாக தமிழக அரசு தளர்த்தி வருகிறது. அதனையடுத்து கடந்த நவம்பர் 10 ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் நேற்றிரவு சந்தித்துள்ளார். அதில் , இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதையொட்டி திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்குமாறு முதல்வரிடம் விஜய் கோரிக்கை வைத்தாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வருடனான இந்த சந்திப்பின்போது மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார், அமைச்சர் வேலுமணி உடன் இருந்துள்ளனர். மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு வரும் 13 ஆம் தேதி வெளியிடவுள்ள நிலையில் இந்த திடீர் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் நேற்றிரவு சந்தித்துள்ளார்