நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக இருந்து வருகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், திருட்டு பயலே 2 இரண்டாம் குத்து உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மீடுவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதில், விஜய் தேவரகொண்டா படத்தில் நடிப்பதற்காக பிரபல இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி தென்னிந்திய சினிமாவில் சர்ச்சையை கிளப்பினார்.
இந்நிலையில் மீண்டும் ஒரு மீடு புகாரை தெரிவித்துள்ளார் ஷாலு ஷம்மு. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், பெரிய நடிகரின் படத்தின் நடிப்பதற்கு காம்ப்ரமைஸ் செய்து கொள்ள தவறினால், நடிகைகளின் திறமை நிராகரிக்கப்படுகிறது. துன்புறுத்துவதை நிறுத்துங்கள், எங்களுக்கு மாற்றம் வேண்டும். ஒரு போதும் நங்கள் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளமாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து பெரிய நடிகர் யார் என்பதை குறிப்பிடாத ஷாலு ஷம்முவின் இந்த பதிவு மீண்டும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.