சினிமா

வெளியாகியது “பொன்னியின் செல்வன்” படத்தின் அப்டேட்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு வரலாற்று திரைப்படமாக உருவாகி வருகிறது  பொன்னியின் செல்வன். இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா, சரத்குமார், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தினை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ALSO READ  எம்.ஜி.ஆர் மகன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !

படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தினை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. முன்னரே படத்தின் முதல்கட்ட பணிகள் தொடங்கிய நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் படக்குழு படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியானது.  இச்செய்தியை உறுதி செய்யும் விதமாக படக்குழு “பொன்னியின் செல்வன்” படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக அரிபித்துள்ளது.

ALSO READ  "விக்ரம் 60" படத்தில் இணையும் வாணி போஜன் ! 

அதன்படி,  ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க படக்குழு தயாராகி வருவதாகவும் சுமார் ஒரு மாதத்திற்கு இந்த படப்பிடிப்பு அங்கு நடக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் கமல்ஹாசனை தொடர்ந்து சூர்யாவின் காரசாரமான பதிவு :

Shobika

பிக் பாஸ் புகழ் தர்ஷனுடன் ஜோடி சேரும் லாஸ்லிய !

News Editor

மற்ற சீசன்களைவிட பிக்பாஸ் சீசன்-5க்கு பட்ஜெட் அதிகம் :

Shobika