தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ் சினிமாத்துறையில் நடன இயக்குனராக அறிமுகமானார். பின்பு அவரின் முயற்சியால் நடிப்பு மற்றும் இயக்கத்திலும் கலக்கி வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் ராகவா லாரன்ஸின் முந்தைய படம் “லட்சமி” என்ற பெயரில் ஹிந்தியில் இயக்கிருந்தார். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சானங்களையே பெற்றது . அதனை தொடர்ந்த தற்போது பி வாசு இயக்கும் சந்திரமுகி 2 படத்திலும், தயாரிப்பாளர் கதிரேசன் தயாரிக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன் பின் கதிரேசன் தயாரிக்கும் படத்திற்கு “ருத்ரன்” என படக்குழு பெயரிடப்பட்டுள்ளது. பின் இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் படத்தின் இயக்குநர் யார் என்று அறிவிக்கவில்லை, அதனையடுத்து ருத்ரன் படத்தின் இயக்குனர் யார் என்று கேள்வி எழும்பியது.
இந்நிலையில் “ருத்ரன்” படத்தினை தயாரிப்பாளரான கதிரேசனே இயக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் ஆடுகளம், ஜிகிர்தண்டா, பொல்லாதவன் போன்ற படங்களை தயாரித்து மக்களிடையே பிரபலமடைந்தார்.
அதனையடுத்து தயாரிப்பாளர் கதிரேசன் “ருத்ரன் ” படத்தினை இயக்குவதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.
#raghavalawrance #rudhra #tamilthisai #tamilcinema