தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. நடிகர் பார்த்திபன் தேர்தலுக்கு முந்தைய நாள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தனது ட்விட்டர் பதிவின் மூலம் வலியுறுத்தி வந்தார். ஆனால் விழிப்புணர்வு செய்த அவரே வாக்கு செலுத்தவில்லை, அதனால் இணையவாசிகள் அவரிடம் கேள்வி எழுப்பி வந்தனர். இதனையடுத்து நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வணக்கமும் நன்றியும்! ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு! வருத்தமும்,இயலாமையும். இரண்டாம் தவணை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது டாக்டருக்கு போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துக்கொண்டேன் எனவே .
தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இதுபோன்ற reactions. அதுவும் எனக்கு ஏற்கனவே allergy issues இருந்ததால் மட்டுமே trigger ஆனது.என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில்… என குறிப்பிட்டுள்ளார்.
#Parthiban #TamilThisai #TamilCinema #Tamilmovie #Cinema #Cinemanews CinemaTrending #Tamilnadu #TNelection #ActorParthipan