சினிமா

ஜல்லிக்கட்டு உயர்பலியை தடுக்க யோசனை வழங்கிய அரவித்சாமி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் பல இடங்களில் நடைபெற்றது. அதில், அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் பிரசித்தி பெற்றவை.

வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை விழா கமிட்டியினர் மேற்கொண்டாலும் போட்டிகளின் போது ஏற்படுகின்ற உயிரிழப்புகள் தடுக்க முடியாதவையாகின்றன. அந்த வகையில், சில உயிரிழப்புகள் இந்தாண்டும் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் நடிகர் அரவித் சாமி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில்,  “பாதுகாப்பு அம்சங்களை விளையாட்டில் அறிமுகப்படுத்துவது போட்டியின் சுவாரசியத்தை குறைக்காது. கிரிக்கெட், பாக்சிங், ஹாக்கி, ஆட்டோ ரேஸ், தற்காப்புக் கலைகள், சைக்கிளிங் ஆகிய போட்டிகளில் இதன்மூலம் பல்வேறு உயிரிழப்புகள் தடுக்கப்பட்டும் காயங்கள் குறைந்தும் உள்ளன. இது வீரர்களுக்கு மரியாதை அளிக்கவும் விளையாட்டை பிரபலப்படுத்துவதற்கும் வழிவகை செய்யும். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் பரிசீலனை செய்யமுடியுமா?” எனக் குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ  காரை விற்று காற்று(ஆக்சிஜன்) கொடுத்த நெகிழ்ச்சி மனிதர் !

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஷாருக்கானை தடுத்து நிறுத்திய சுங்கத்துறை அதிகாரிகள்?

Shanthi

BREAKING லதா மங்கேஷ்கருக்கு கொரோனா… ஐசியூவில் அனுமதி!

naveen santhakumar

‘வாடிவாசல்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் :

Shobika