சினிமா

அனைவரின் கவனத்தை ஈர்த்த “டெடி” படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆர்யா, சாயிஷா ஆகியோரின் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் OTT-ல் வெளியான படம் “டெடி”. சக்தி சவுந்தரராஜன் இயக்கியிருந்த இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து இருந்தார். ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தில் இடம்பெறும் ‘டெடி’ என்கிற பொம்மை கதாபாத்திரம் குழந்தைகள் ரசிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்ததால் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

ALSO READ  இதெல்லாம் எனக்கு செட்டாகாது ஒருபோதும் அவ்வாறு நடிக்க மாட்டேன்- ப்ரியா பவானி சங்கர் ஓபன் டாக்...

இந்நிலையில், விரைவில் டெடி படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளதாக நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார். இயக்குனர் சக்தி சவுந்தரராஜன் டெடி இரண்டாம் பாகத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இப்படத்தில் நடிக்க ஆவலோடு இருப்பதாகவும் ஆர்யா கூறியுள்ளார்.

நடிகர் ஆர்யா கைவசம் சுந்தர் சி-யின் அரண்மனை 3, விஷாலுடன் எனிமி, பா.இரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் உள்ளன.இந்த 3 படங்களும் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஏழு ஸ்வரங்களின் இடைவெளி எட்டு.

naveen santhakumar

‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் !

News Editor

ஆதி படத்தின் அடுத்த அப்டேட் வெளியீடு !

News Editor