கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. உலகம் முழுவதும் பரவிய இந்த வைரசின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அதனையடுத்து. இங்கிலாந்தில் தற்போது கொரோனா வைரஸ் மரபியல் மாற்றம் அடைந்து புதிய வகை வைரஸாக பரவி உலகையே அச்சுறுத்தி வருகின்றது.
இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகரான ராம் சரணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்த அறிகுறியும் இல்லை. தற்போது என்னைத் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். விரைவில் குணமடைந்து வலிமையாக மீண்டு வருவேன் என நம்புகிறேன்.
மேலும், கடந்த இரு நாட்களாக என்னுடன் இருந்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்ட அவர், தனது உடல்நலம் குறித்த கூடுதல் தகவல்களை விரைவில் கூறுகிறேன்” என்று நடிகர் ராம் சரண் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.