பிரபல மலையாளப் பட நடிகரும் மாரி-2 படத்தில் வில்லனாகவும் நடித்த டோவினோ தாமஸ் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் டொவினோ தாமஸ். இவர் நடித்த கோதா, அபியம் அனுவம் மற்றும் மாயநதி போன்ற படங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றன. தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி-2 படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். அவர் தற்போது “காலா” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் காலா படபிடிப்பின் சண்டை காட்சியில் ஏற்பட்ட காயம் காரணமாக டொவினோ தாமஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஒரு சண்டை காட்சியில் டோவினோ வயிற்றில் வில்லன் மிதிப்பது போன்று காட்சி, அதில் எதிர்பாராத விதமாக டோவினோவின் வயிற்றில் காயம் ஏற்பட்டது. வயிற்று பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டதால் உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வயிற்றில் ஒரு நரம்பு அறுந்து உள்பகுதியில் ரத்த கசிவு (Internal Bleeding) ஏற்பட்டதால் ICUவிற்கு மாற்றப்பட்டுள்ளார், என மருத்துவர்கள் தெரிவித்தனர். டொவினோ தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது குறித்து அறிந்த ரசிகர்கள், சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.