தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும், ஒளிப்பதிவாளராகவும் இருக்கும் கே.வி.ஆனந்த மாரடைப்பால் காலமானார். இவரின் மறைவுக்கு திரைபிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் கே.வி.ஆனந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்…
“வருந்துகிறேன் நண்பா!
திரையில் ஒளிகொண்டு சிலை செதுக்கினாய்!
வாஜி வாஜி பாடலை ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!
என் எத்தனையோ பாடல்களை ரத்தினமாய் மாற்றினாய்!
இதோ உனக்கான இரங்கல்பாட்டை எங்ஙனம் படம் செய்வாய்?
விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது கே.வி.ஆனந்த்!
ஒளியாய் வாழ்வாய் இனி நீ “எனக் குறிப்பிட்டுள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.