நடிகை வனிதா விஜயகுமாரின் கணவர் பீட்டர்பாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை வனிதா விஜயகுமார் visual effects இயக்குநர் பீட்டர் பால் திருமணம் கடந்த 27-ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி எளிமையாக நடந்தது. இதையடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னிடம் விவாகரத்து பெறாமலேயே இத்திருமணம் நடைபெற்றதாக போலீசில் புகாரளித்தார்.இதுகுறித்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
வனிதா – பீட்டர் பால் மறுமணம் குறித்து சமூகவலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். பீட்டர்பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்தார் வனிதா விஜயகுமார்.
வனிதா – பீட்டர் பால் தம்பதியினர் போரூரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த நிலையில் நேற்று இரவு பீட்டர்பாலுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், “சொல்ல நிறைய இருக்கிறது… ஒன்றும் என்னால் முடியவில்லை. கடவுள் மிகப்பெரியவர்.. நம்புங்கள்.. எல்லாமே ஒரு காரணத்திற்காகத்தான் நடக்கிறது. வாழ்க்கை கடினமானதே… எதிர்கொள்ளுங்கள்… எல்லாமே சரியாகும்., கஷ்டத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்,, திருப்பி அடியுங்கள்… இந்த உலகுக்கு உங்களால் முடிந்தால் காட்டுங்கள்…” என்று வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.