வயது மூப்பு காரணமாக பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி காலமானார். அவருக்கு வயது 94.
காரைக்குடியைச் சேர்ந்த பழம்பெரும் நடிகை ஜமுனா ராஜேஸ்வரி. ஜெமினி ராஜேஸ்வரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்து இருக்கிறார். சந்திரலேகா படம் மூலம் சினிமாவில் நடன நடிகையாக அறிமுகமானார்.
அதனால் அவருக்கு ஜெமினி ராஜேஸ்வரி என்ற பட்டம் கிடைத்தது. 400 படங்களுக்கு மேல் நடனம் ஆடி உள்ளார்.
16 வயதினிலே, பாக்யராஜின் சின்ன வீடு மற்றும் மண் வாசனை, நிறம் மாறாத பூக்கள், நீறு பூத்த நெருப்பு, இது எங்க நாடு, விளையாட்டு கல்யாணம், பத்தாம் பசலி, உனக்காக நான், திருடன், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன். எதிர்நீச்சல் மற்றும் கயல் உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார்.
16 வயதினிலே திரைப்படத்தில் காந்திமதி உடன் சண்டை போடும் பெண் இவர்தான், என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் ஜெமினி ராஜேஸ்வரியின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்