நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அது மட்டுமில்லாமல் தமிழை தவிர தெலுங்கு. மலையாளம், ஹிந்தி போன்ற மற்ற மொழியிலும் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி தற்போது இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ‘அந்தாதூன்’ திரைப்படம் கடந்த 2018 ஆண்டு இந்தியில் வெளியானது. அந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர்கள் நடித்திருந்தனர். இதனை இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிருந்தார். அந்தாதூன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது, ரூ 40 கோடிக்கு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ 450 வசூல் செய்தது. அதனை தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்த திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான மூன்று தேசிய விருதுகளை வாங்கியது. சிறந்த நடிப்பிற்க்காக ஆயுஷ்மான் குரானாவுக்கும் ,சிறந்த இந்தி படம் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகிய மூன்று பிரிவுகளில் விருதினை வாங்கியது.
இந்நிலையில் ‘அந்தாதுன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளது உறுதியாகிவிட்டது. இதில் அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடிக்க இருக்கிறார். மேலும் இப்படத்திற்கு மெர்ரி கிறிஸ்துமஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
விஜய்சேதுபதி தற்போது காந்தி டாக்ஸ் மற்றும் மாநகரம் இந்தி ரிமேக் படத்தை நடித்து முடித்துவிட்டு இப்படத்தில் கவனம் செலுத்தவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மெர்ரி கிஸ்துமஸ் படத்தின் மற்ற கலைஞர்கள் தேர்வு நடத்துவருவதால் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.