தமிழ் சினிமாவில் பல மறக்க முடியாத பாடல் வரிகளை எழுதியவர் வைரமுத்து. இன்று எஸ்ஆர்எம் கல்லூரியில் வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதாக இருந்தது . இதனை பார்த்து ஆவேசமடைந்த சின்மயி , அவரின் டாக்டர் பட்டம் விழாவிற்கான அழைப்பிதழை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு , ‘மீடூ விவகாரத்தில் சிக்கியவருக்கு டாக்டர் பட்டமா? என்று கூறி தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
9 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் டாக்டர் பட்டம் வழங்கப் போகிறாராம். இந்த நேரத்தில் நான் உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். பாலியல் துன்புறுத்தல் அளித்த அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை, ஆனால் நான் வேலை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
சபாஷ், ‘எஸ்.ஆர்.எம் உங்கள் கல்லூரி, உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் சிறந்த ரோல் மாடலை உதாரணமாக எடுத்துக் காட்டி இருக்கிறீர்கள்’ என்று ஆவேசமாக பதிவிட்டு ட்விட்டர் வாசிகளை மிரள வைத்துள்ளார்.
இந்நிலையில் வைரமுத்துவிற்கு வழங்க இருந்த டாக்டர் பட்டத்தை எஸ்.ஆர்.எம் கல்லூரி ரத்து செய்துள்ளது.பல்கலைகழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள புது அழைப்பிதழில், வைரமுத்துவின் பெயர் இடம் பெறவில்லை. சின்மயின் கண்டனத்தால் தான் வைரமுத்துவின் டாக்டர் பட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.