நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான சக்ரா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது இவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் இயக்குனர் து.பா.சரவணன் இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்கவுள்ளார்.
இயக்குநர் து.பா.சரவணன் குள்ளநரி கூட்டம், தேன் போன்ற திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். இதனையடுத்து, எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தை இயக்கிருந்தார். இக்குறும் படம் வெளியாகி பலரின் பாராட்டுகளை பெற்றது. ஆகையால் தான் நடிகர் விஷால் இயக்குநர் து.பா.சரவணனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதாக திரைத்துறையில் பேசப்பட்டு வருகிறது.
நடிகர் விஷால் நடித்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் ஒளிப்பதிவு செய்ய பாலசுப்பிரமணியனும், படத்தொகுப்பு செய்ய என்.பி.ஸ்ரீகாந்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அரசியல் பின்னணியை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்படவுள்ளது. தற்காலிகமாகா விஷால் 31 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
#Vishal #Vishal31 #tamilmovie #TamilThisai #tamilcinema #Saravanan #cinemanews #cinematrending #Cineupdate #VFF #kollywood