தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் விஷ்ணு விஷால் தற்போது இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் எப்.ஐ.ஆர். படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு மஞ்சிமா மோகன், கௌதம் மேனன் உள்ளிட்டோர்கள் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதி கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.
இந்த நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்தப் படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. ‘மோகன் தாஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை முரளி கார்த்திக் இயக்குகிறார். இவர், ‘களவு’ படத்தின் இயக்குநர் ஆவார். இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். படத்தின் முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் படக்குழு, விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.