தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதி பிரசன்னா-சினேகா தம்பதியின் 2வது குழந்தைக்கு ‘ஆத்யந்தா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நடிகர் பிரசன்னா- நடிகை சினேகா தம்பதியினருக்கு கடந்த ஜனவரி மாதம் பெண்குழந்தை பிறந்தது.பெண் குழந்தை பிறந்த விஷயத்தை, நடிகர் பிரசன்னா ட்விட்டரில் ‘தை மகள் வந்தாள்’ என தெரிவித்தார்.
இந்நிலையில் பெண் குழந்தைக்கு ‘ஆத்யந்தா’ என பெயர் சூட்டியுள்ளதாக பிரசன்னா தெரிவித்துள்ளார். நவீன உலகத்தில் எத்தனையோ விதவிதமான பெயர்கள் இருக்கும் போது இப்படி ஒரு பெயரை சூட்டியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆத்யந்தா என்றால் ஆதியும் அந்தமும் அற்றவள், முதலும் முடிவும் இல்லாத Forever என்பதாகும்.
ஏற்கனவே இந்த தம்பதியினருக்கு 4 வயதில் விஹான் என்ற மகன் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.