ஈரோடு:
முதல் சீதனம், சிம்மராசி போன்ற படங்களை இயக்கியவர் ஈரோடு சௌந்தர்.அதுமட்டுமல்லாது சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் போன்ற படங்களுக்கும் கதை, வசனம் எழுதியவர். சேரன் பாண்டியன், நாட்டாமை படத்தின் கதைக்காகவும், சிம்மராசி படத்திற்கு வசனத்திற்காகவும் தமிழக அரசு விருதினை பெற்ற புகழுக்கு சொந்தமானவர்.
ரஜினியுடன் லிங்கா, கமலுடன் தசாவதாரம் ஆகிய படங்களில் ஈரோடு சௌந்தர் நடித்துள்ளார்.இந்நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஈரோடு சௌந்தர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
63 வயதாகும் ஈரோடு சௌந்தருக்கு வளர்மதி என்ற மனைவியும், கலையரசி, காயத்ரி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். ஈரோடு சௌந்தரின் இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.