சென்னை:
நடிகர் யோகிபாபு, இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ‘பேய் மாமா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ரேஷ்மா, ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, வையாபுரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் படக்குழு மற்றும் சில நடிகர்கள் கலந்து கொண்டனர்.அதில் பேசிய யோகிபாபு
“நான் நிறைய காமெடி படங்களில் நடிச்சிருக்கேன். அப்போது ஸ்டேஜில் ஏறி இரண்டு நிமிஷம் பேசிட்டு போயிருவேன். ஆனால் இப்போ ஷக்தி சிதம்பரம் சார் கதாநாயகனா நடிக்க வச்சிட்டாரு பயமா இருக்குது.
இந்த படம் முதல்ல வடிவேல் சாருக்காக பண்ணது அப்படின்னு சொன்னாரு. வடிவேல் சார் ஜீனியஸ். நீங்க அவருக்காக நிறைய விஷயங்கள் பண்ணி இருப்பீங்க. அது எனக்கு எப்படி சார் செட் ஆகும்னு கேட்டேன். எனக்கு ஒரு கேரக்டர் இருந்தா வேணா சொல்லுங்கன்னு சொன்னேன். இல்ல சார் உங்களுக்காக நான் நிறைய மைத்திருக்கேன்னு சொன்னாரு.
என்னோட பேமெண்ட் குறைக்கணும்னு சொன்னாரு. நான் கொரோனாவுக்கு முன்னாடியே கொரோனாக்கு அப்பறம் குடுக்குற பேமெண்ட் தான் வாங்குனேன். ஒரு பொண்ணு வந்து உங்களுக்காக ஒரு படம் பெண்ணிருக்கேன். நீங்க நடிச்சு குடுக்கணும், சின்ன பட்ஜெட் தான். இந்த கல்யாணம் நடந்தா தான் என் கல்யாணம் நடக்கும்னு சொன்னுச்சு. நான் பிரீயாவே நடிச்சுத் தரேன். முதல்ல உன் கல்யாணம் நடக்கணும்னு சொன்னேன்” என்று தெரிவித்தார்.
யோகிபாபுவின் இந்த செயல் பலரது மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது.