சென்னை:
நடிகர் யோகி பாபு மிகப்பெரிய பக்தி மான் என்பது அவரது ட்விட்டர் பக்கத்தில் உள்ள முருக கடவுள் புகைப்படமே எடுத்துரைக்கும்.
இந்நிலையில், தனக்கு சொந்தமான இடத்தில் நடிகர் யோகி பாபு வராகி அம்மனுக்கு கோயில் ஒன்றை கட்டி அதன் கும்பாபிஷேகத்தையும் நடத்தி முடித்திருக்கிறார்.
சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு தனக்கு அனைத்து யோகங்களையும் வாரி வழங்கி வரும் வராகி அம்மனுக்கு கோயில்ஒன்றை கட்டி உள்ள நிலையில், அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியும் வருகின்றன.
காமெடி உலகில் திடீரென உருவாகிய மிகப்பெரிய வெற்றிடத்தை தனக்கு சாதகமாக மாற்றி அதனை நிரப்பி அசத்தி வரும் யோகி பாபு,
முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடி செய்து கலக்குவது மட்டுமின்றி தானும் ஹீரோவாக நடித்தும் வெற்றிகளை குவித்து வருகிறார்.
மேலும் நகைச்சுவையை தாண்டி யோகி பாபுவுக்குள் இருக்கும் நல்ல நடிகரை பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குநர் மாரி செல்வராஜ் காண்பித்தார்.
தொடர்ந்து கர்ணன் படத்திலும்,அவரே ஹீரோவாக நடித்த மண்டேலா படத்திலும் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துக் காட்டி உள்ளார் யோகி பாபு என்பது குறிப்பிடத்தக்கது.