ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கும் மசோதா தாக்கல் !
தமிழகத்தில் கடந்த 2 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்கிய நிலையில், இன்று ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிப்பதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டிருந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அவசரச் சட்டத்தின் மூலம் தடையும் விதிக்கப்பட்டிருந்தது. ...