2019 ஆண்டில் உலக அளவில் அதிகம் தேடப்பட்ட உணவாக சிக்கன் பிரியாணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபின் சிறப்பு பெற்ற உணவான பட்டர் சிக்கன் 4 லட்சம் முறையும் வட மாநிலங்களில் சமோசா 3.9 லட்சம் முறையும் சிக்கன் டிக்கா 2.5 லட்சம் முறையும் தேடப்பட்டுள்ளது. இப்படி அந்த பட்டியலில் பாலக் பனீர், தந்தூரி சிக்கன், சிக்கன் டிக்கா மசாலா, மசாலா தோசை, தால் மக்கானி, நாண் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலை செம் ரஷ் என்ற குழு ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.
செம் ரஷ் குழுவின் தலைவர் ஃபெர்னாண்டு அங்குலோ பேசியபோது “ பஞ்சாப் உணவுகளைதான் பலரும் அதிகம் தேடியுள்ளனர். அதேபோல் சைவத்தைக் காட்டிலும் அசைவ உணவுகள்தான் தேடுதல் பட்டியலில் அதிகம் இருக்கின்றன.
பிரியாணி உலக அளவில் பிரபலமடைந்திருப்பது ஆச்சரியத்திற்குரிய விஷயமல்ல. ஏனெனில் நம் நாட்டு மக்கள் உலகின் எல்லா மூளைகளிலும் வசிக்கின்றனர்.
எங்கு சென்றாலும் நம் ஊர் உணவின் பெருமைகளை பரப்ப தவறுவதில்லை. அதேபோல் நம் நாட்டிலிருந்து சென்ற இந்தியர்கள்தான் உலக ஹோட்டல் நிறுவனங்களில் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். எனவேதான் நம் உணவுகள் உலக அளவில் பெரிதாகவும், அதிகமாகவும் பேசப்படுகிறது “ என்று கூறினார்.