தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
குஜராத்தில் உணவகங்களில் அசைவ உணவுகளைக் வெளியே காட்சிக்கு வைக்க தடை விதிக்கப்பட்டிருப்பது அம்மாநில மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் உள்ளது வதோதரா மற்றும் ராஜ்கோட் மாநகராட்சி. இந்த 2 மாநகராட்சிகளில் உள்ள உணவகங்களில் இனி வரும் காலங்களில் அசைவ உணவுகளைக் காட்சிக்கு வைக்கக்கூடாது என மாநகராட்சிகளின் மேயர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் இறைச்சி உணவுகளைக் கடைகளில் காட்சிப்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த நடைமுறையை 15 நாட்களுக்குள் கடை உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.இந்த உத்தரவை பின்பற்றவில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த உத்தரவால் குஜராத் வதோதரா பகுதியில் உள்ள இறைச்சிக்கடை உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.