பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோனிதேவி, மணிஷ்ராம் தம்பதியினர். இருவருக்கும் 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
தற்போது மாநில பெண்கள் ஆணையத்தில் விவகாரத்து கோரி சோனிதேவி விண்ணப்பித்துள்ளார்.
அதில், தனது கணவர் மணிஷ்ராம் தினமும் குளிப்பதில்லை, பல் விளக்குவதில்லை. முறையாக ஷேவ் செய்வதில்லை.
பொதுஇடத்தில் எப்படி நடக்கவேண்டும் என்று தெரியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, மாநில பெண்கள் ஆணையம் சோனி தேவியின் கணவர் மணிஷ் ராமிடம் விளக்கம் கேட்டுள்ளது.
மேலும், இரண்டு மாத காலத்துக்குள் பழக்க வழக்கத்தை மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த மாநில பெண்கள் ஆணைய உறுப்பினர், ‘புகார் அளித்த சோனி தேவியிடம் கணவரிடம் சேர்ந்து வாழ அறிவுறுத்தி உள்ளனர்.
விவாகரத்து வாங்க வேண்டும் என்பதில் சோனிதேவி உறுதியாக உள்ளார்.
திருமணமானவர்கள் விவகாரத்து பெறுவது இயல்புதான். ஆனால், வலுவற்ற காரணங்களுக்காக விவாகரத்து பெறுவது நல்ல அறிகுறி கிடையாது.