காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த ஷமிமா என்னும் கர்ப்பிணித் தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டது. எவ்வித போக்குவரத்து வசதியும் இல்லாத சூழலில் அப்பெண்ணை 100 ராணுவ வீரர்கள் சேர்ந்து தூக்கிச் சென்றுள்ளனர். 100 ராணுவ வீரர்களுடன் 30 பொது மக்களும் உடன் பயணித்து உள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. இந்த சூழலில் உதவி செய்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
4 மணி நேரத்துக்கும் அதிகமாக நடந்து சென்று அப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நகர்ப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஷமீமாவுக்கு குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
எந்த சூழலிலும் மக்களுக்கு உதவி வேண்டுமென்றால் தங்களால் முடிந்த அத்தனையையும் செய்பவர்கள் நமது ராணுவத்தினர். பெருமையாய் உள்ளது. ஷமீமா மற்றும் அவரது குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமென பிராத்தனை செய்துகொள்கிறேன்” என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.