போபால்:
மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் ராம் விஷால் குஷ்வாகா இவருக்கு 22 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட, இவரது மகன் மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி ராம் விஷாலின் மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் ,இவரது நிலைப்பற்றி குடும்பத்தினரிடம் மருத்துவமனை நிர்வாகம் தகவல் எதுவும் கூறவில்லை .பலமுறை இவரது தந்தை போராடியும் அவர்களிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை.
கடந்த 9ஆம் தேதி, திடீரென்று சிகிச்சை பலனின்றி அவரது மகன் இறந்துவிட்டதாக கூறி ,மருத்துவ நிர்வாகம் சடலத்தை அளித்தது.
இறுதியில் சடலத்தை பார்த்த பொழுது அதில் அவரது மகன் சடலம் இல்லை, அதற்கு பதிலாக 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் உடல் அந்த பையில் இருந்தது.
இதுகுறித்து மருத்துவ நிர்வாகத்திடம் விசாரித்தபோது உள்ளாட்சி ஊழியர்கள் தவறுதலாக ராம் விஷாலின் மகன் உடலை எரித்து விட்டதாக நிர்வாகிகள் பதிலளித்தனர்.
இதனால் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதனை தொடர்ந்து மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர் ராகேஷ் படேல் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் .மகனின் உடலை கடைசியாக பார்க்க முடியவில்லை என்பது மட்டுமல்லாமல் ஆஸ்தியும் கிடைக்கவில்லையே ,என்ற சோகத்தில் அவரது குடும்பத்தினரும் ,அப்பகுதி மக்களும் வருத்தத்தில்