மும்பை:-
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸால் இந்தியாவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவிலேயே அதிக அளவிலான வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மஹாராஷ்ட்ரா திகழ்கிறது. இந்நிலையில் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன்:-
பொது மக்களை பாதுகாப்புடனும், விழிப்புணர்வோடும் இருக்குமாறு கூறியுள்ளார். மேலும், காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுரை கூறியுள்ளார்.
மேலும், அமிதாப் பச்சன் UNICEF சார்பில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.