மறைந்த முந்நாள் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேல் பெயரிலான நாட்டின் உயர்ந்த குடிமை விருது ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி அறிவித்தார். உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு இணையாக இந்த விருது கருதப்படும்.
நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பாடுபடுவோர்க்கு படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31 இவ்விருது வழங்கப்பட உள்ளது.
இதற்கான நாமினேஷன் வரும் ஏப்ரல் 30 வரை உள்ளது. அக்டோபர் 31ஐ தேசிய ஒற்றுமை தினமாகவும் மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் நாட்டின் மிக உயரிய சிவில் விருதான சர்தார் படேல் ஒற்றுமை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2020-ம் ஆண்டிற்கான நாட்டின் மிக உயரிய சிவில் விருதான சர்தார் படேல் ஒற்றுமை விருதுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. விண்ணப்பங்களுக்கான கடைசி நாள் ஏப்ரல் 20-ம் தேதி ஆகும்.
https://nationalunityawards.mha.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதி
மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம், வயது அல்லது தொழில் மற்றும் எந்த நிறுவனம் / அமைப்பு என்ற வேறுபாடு இல்லாமல் இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் விருதுக்கு தகுதியுடையவர். தனிநபர்கள் / நிறுவனங்கள் / நிறுவனங்கள் மட்டுமே இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அரசு அறிவித்துள்ளது.