பயணிகள் ரயில்களை இயக்கும் தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ப ரயில் கட்டணங்களை நிர்ணயித்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கூறிய ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ்:-
பயணிகள் நலன் கருதி அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இந்திய ரயில்வேயில் 1,500 முதல் 2000 ரயில்கள் இணைக்கப்பட இருக்கிறது. இந்த அளவுக்கு கூடுதல் ரயில்களை நிர்வகிக்க அரசால் முடியாது என்பதாலேயே தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
விமானப் போக்குவரத்துத்துறையில் போல, பயணிகள் ரயில்களை இயக்கவிருக்கும் தனியார் ரயில் நிறுவனங்கள் சந்தை நிலவரத்தைச் சார்ந்து அவர்கள் விரும்பும் எந்தக் கட்டணத்தையும் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், தற்போதைக்கு தனியாரால் இயக்கப்படும் பயணிகள் ரயில்களுக்கு கட்டண வரம்பு நிர்ணயிப்பது குறித்து; இதுவரை அரசிடம் எந்த பரிசீலனையும் இல்லை என்றும் அவர் கூறினார்.