பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிட்ட மனைவியை கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாவட்டத்தை சேர்ந்தவர் அஜஸ் முகமது கான். இவர் மங்ளானி என்ற பெண்ணை 2 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் திருமணத்திற்கு பின்னால் கணவனுடன் நேரம் செலவிடாமல் மங்ளானி பேஸ்புக்கிலேயே நேரத்தை செலவிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.இப்படி ஒரு நாள் சண்டையில் மனைவியின் மொபைலை முகமது கான் பார்த்துள்ளார்.
அதில் மனைவியின் account-ல் 6000-க்கும் மேற்பட்டோர் பின்பற்றுவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.பின்பு சண்டை முற்றிப்போக மங்ளானி கோபித்துக்கொண்டு தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் மாங்ளானியை தொடர்புக்கொண்டு நம் சண்டையை பேசித் தீர்த்து கொள்ளலாம் என முகமது அழைக்க, அதனை நம்பி அந்த பெண்ணும் வந்துள்ளார்.இந்த முறையும் மங்ளானி அடிக்கடி பேஸ்புக்கை பயன்படுத்தியதால் கோபத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளார் அஜஸ் முகமது.
அதன் பின் மனைவியின் கழுத்தை நெறித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.சமூக வலைதள பயன்பாட்டால் கணவன், மனைவியை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பேசும் பொருளாகியுள்ளது.