டெல்லியில் மன அழுத்தம் காரணமாக தொழிலதிபர் தனது குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியின் ஷாலிமார் பகுதியை சேர்ந்த மதூர் மலானி என்ற தொழிலதிபர் நடத்தி வந்த காகித தொழிற்சாலை 6 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.
மீண்டும் ஆலையை திறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த மதுர் மலானி மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும், குடும்பத்தினருக்கு மதுர் மலானியின் பெற்றோர்கள் ஆதரவாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் வீட்டில் குழந்தைகள் இருவரும் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மதுர் மலானியை காணததால் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அருகிலுள்ள மெட்ரோவில் ரயில் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.
தொழிலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் மதுர் மலானி மனைவி அருகில் உள்ள மார்க்கெட்டிற்கு சென்றதால் அவர் தப்பித்தார்.