ஆகஸ்ட் மாதம் முழுவதும் 22.8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் திருப்பதியில் 140.7 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வரும் போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின்னர் கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போது உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது. அதில் கடந்த மாதம் மட்டும் அதிகபட்சமாக ஒரே நாளில் ரூ.5.86 கோடி வரை உண்டியல் வசூலானதையடுத்து 22 நாளில் ரூ.100 கோடி உண்டியல் வருமானம் கிடைத்தது. கடந்த மாதம் முழுவதும் 22.8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் 140.7 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்தது புதிய சாதனையாக பதிவாகி உள்ளது.