திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்து உள்ளது. ஓணம் பண்டிகை வருவதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி திறந்து வைத்து வழிபாடு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் இந்த மாதம் 23ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகையும் சேர்ந்து வருவதால் 8 நாட்கள் தொடர்ச்சியாக சபரிமலையில் பூஜைகள், வழிபாடு நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
கொரானா தொற்று காரணமாக ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்படும் எனவும் பக்தர்கள், தரிசனத்திற்கு 48 மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்ட கொரானா தொற்று இல்லை என்ற சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்து உள்ளது.