லூதியானா:-
பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் போலீசார் பிடித்த திருடர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து 17 காவலர்கள் உள்பட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
போலீசிடம் சிக்கிய வாகன திருடன் சவுரவ் செகல் (25) என்பவன் கடந்த 5ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டான்.
மறுநாள் அந்த திருடனுக்கு இருமலும் காய்ச்சலும் இருந்ததால் மருத்துவப் பரிசோதனைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதில் திருடனுக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி, வழக்கறிஞர்கள், நீதிமன்ற வளாகத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் உள்பட அனைவரும் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல், இவனை பிடிப்பதற்கு அந்த பகுதியை சேர்ந்த இருவர் உதவியுள்ளனர், திருடனின் குடும்பத்தினர் 11பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சவுரவின் கூட்டாளியான ஜபேவால் கிராமத்தை சேர்ந்த நவ்ஜோத் சிங் (25) போலீசாரிடமிருந்து தப்பியோடி விட்டதால் அவனை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.