இந்தியா

செல்பியால் விபரீதம்…. ராஜஸ்தான் அரண்மனையில் 18 பேர் உயிரிழப்பு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அஜ்மீர்:-

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் அருகே உள்ள ஒரு அரண்மனையில் செல்பி எடுத்த போது மின்னல் தாக்கி 18 பேர் உயிரிழந்த துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

latest tamil news

ஜெய்ப்பூர் அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த அமர் அரண்மனை உள்ளது. இங்கு நேற்று (ஜூலை 11) மாலையில் மாநிலம் முழுவதும் அதீத மழை பெய்தது. இந்நேரத்தில் பலர் கண்காணிப்பு கோபுரம் மீது ஏறி அரண்மனை சுற்றுப்பகுதிகளை பைனாகுலர் மூலம் பார்த்து கொண்டிருந்தனர்.

ALSO READ  அமெரிக்காவில் நிகழ்ந்தது போல ராஜஸ்தானில் 'மாஸ்க்' அணியாததால், கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்!

அந்த நேரத்தில் மின்னல் தாக்கியுள்ளது. இதில் 27 பேரில் 11 பேர் பலியாகினர். பலர் கோபுரத்தில் இருந்து குதித்ததில் காயமுற்றனர். பலியானவர்களில் சிறார்கள் 5 பேர் ஆவர்.

இதே போல் கோடா, ஜலாவர், பரண் உள்ளிட்ட பகுதிகளில் மின்னல் தாக்கியதில் சிறார்கள் 3 பேர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

ALSO READ  கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் ரத்து-கலெக்டர் அதிரடி :

இதனிடையே ராஜஸ்தானில் மின்னல் தாக்கி உயிரிழந்த 18 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மின்னல் தாக்கியதில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சமூக ஊடகங்களிலிருந்து வெளியேற போவதாக பிரதமர் மோடி அறிவிப்பு…

naveen santhakumar

தேர்தலில் இந்த கட்சி 100 சீட்டுகள் வென்றால் என் தொழிலை விட்டுவிடுகிறேன்-பிரசாந்த் கிஷோர் !

News Editor

கொரோனா பரிசோதனைக்காக 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 40,032 பி.சி.ஆர். (PCR) கருவிகளை தமிழகத்துக்கு அளித்த டாட்டா நிறுவனம்….

naveen santhakumar