புது டெல்லி:
புது டெல்லியில் ஷாம்பு உள்ளிட்ட கூந்தல் பராமரிப்பு சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு 42 வயது பெண் ஒருவர் மாடலிங் செய்து வந்தார். கடந்த 2018 ஏப்ரல் மாதம் தனது துறையில் ஒரு முக்கியமான நேர்காணலுக்கு செல்ல இருந்தார்.
நேர்காணலுக்கு செல்வதற்கு முன்புது டெல்லியில் உள்ள மிகப் பெரிய ஹோட்டலில் உள்ள சலூனுக்கு சென்று தன்னுடைய கூந்தலை அழகுப்படுத்திக்கொள்ள எண்ணியுள்ளார். அங்கு உள்ள சிகையலங்கார நிபுணரிடம் முன்பக்கம் ப்ளிக்ஸ் செய்யும் படியும் , தனது கூந்தலின் அடிப்பகுதியை நான்கு அங்குலம் வரை ட்ரிம் செய்யும்படியும் கூறியுள்ளார்.
சிகையலங்கார நிபுணர் மாடலிங் பெண்மணி கூறியதை தவறாக புரிந்து கொண்டு பின்னங்கழுத்திலிருந்து நான்கு அங்குலம் மட்டும் விட்டுவிட்டு மொத்த கூந்தலையும் கத்தரித்துள்ளார்.
கடும் மன உளைச்சலடைந்த அப்பெண் தேசிய நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்தில் புகார் அளித்தார். அம்மனுவை விசாரித்த ஆணையம் மாடலிங் பெண்ணுக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்கும் படி மிகப் பெரிய ஹோட்டல் நிர்வாகத்திற்கு தேசிய நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணைய உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.