சென்னை:
பெங்களூர் சிட்டி மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே தினமும் AC டபுள் டெக்கர் சூப்பர் ஃபாஸ்ட் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் இயக்கப்படுவதாக தென் மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இரு நகரங்கள் இடையே சொந்த வாகனங்கள், பஸ், விமானம், ரயில்கள் மூலம் தினசரி பல ஆயிரம் மக்கள் பயணித்து வந்தனர். ஆனால் சமீப காலமாக கொரோனா காரணமாக போக்குவரத்து குறைந்திருந்தது.இந்த நிலையில் டபுள் டெக்கர் ரயில் சேவை இன்று முதல் துவங்கியுள்ளது.
பெங்களூர் – சென்னை சென்ட்ரல் AC டபுள் டெக்கர் சூப்பர்ஃபாஸ்ட் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் பெங்களூரிலிருந்து தினமும் மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலை அதே நாள் இரவு 8.30 மணிக்கு வந்தடையும். இந்த ரயிலும் 21.10.2020 முதல் இயக்கப்படுகிறது. அதாவது இரு ரயில்களும் இன்று முதல் தினசரி பழையபடி இயங்க ஆரம்பித்துள்ளன.
AC டபுள் டெக்கர் ரயிலில் இருக்கைகள் மிக அருகாமையில் இருக்கும். இது ஏற்கனவே பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இப்போது கொரோனா காலத்தில் AC ரயில் அதுவும் டபுள் டெக்கர் போன்ற சீட் அருகாமையிலுள்ள ரயில் இயக்கப்படுவது மக்களிடம் வரவேற்பை பெறுமா???? பாதுகாப்பானதா???? என்பது போக போக தான் தெரியவரும்.