திருவனந்தபுரம்
திரைப்பட நடிகர் நெடுமுடி வேணு வயது 73 உடல்நலக்குறைவால் திருவனந்தபுரத்தில் இன்று காலமானார்.
நெடுமுடி வேணு இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் 500க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் 3 தேசிய விருதுகளையும், 6 கேரளா மாநிலத்தின் திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.
நெடுமுடி வேணு தமிழில் 1995-ம் ஆண்டு மோகமுள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். பின்னர் 1996-ம் ஆண்டு ஷங்கரின் இந்தியன், அந்நியன் மற்றும் சிலம்பாட்டம் என பல தமிழ் திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
கேசவன் வேணுகோபால் என்னும் இயற்பெயர் கொண்டுள்ள இவர், திரையுலகில் நெடுமுடி வேணு என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார். 1948 மே 22ல் கேரளாவில் பிறந்த இவர், 1972ல் தனது திரைப்பயணத்தை சினிமாவில் தொடங்கியுள்ளார்.
திரைப்பட நடிகர் நெடுமுடி வேணு தமிழில் வெளியான இந்தியன் , அந்நியன், பொய் சொல்லப்போறோம், சர்வம் தாளமயம், உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் ஆஸ்தான நடிகராக வலம் வரும் நெடுமுடி வேணு இந்தியன் -2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.