தெலங்கானா என்கவுண்டர் குறித்து நடிகை சமந்தா ட்விட்டர் பதிவு…
தெலங்கானாவில் கடந்த 27ஆம் தேதி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று பெண் மருத்துவரை கொலை செய்ததில் ஈடுபட்ட 4 பேரையும், சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது தப்ப முயன்றதால் 4 பேரையும் அங்கேயே என்கவுண்டர் செய்துள்ளனர்.
இதனால் தெலங்கானா போலீசுக்கு மக்கள் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் .பெண் மருத்துவர் கொல்லப்பட்ட, அதே இடத்தில் இவர்கள் 4 பேரும் கொல்லப்பட்டது குறித்து பிரபலங்கள் உள்பட பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் தெலங்கானா என்கவுண்டர் குறித்து பதிவிட்டுள்ளார்.அதில் ‘ஐ லவ் தெலங்கானா, பயம்தான் நல்ல தீர்வு சில சமயங்களில் ஒரே தீர்வு’ என்று தெரிவித்துள்ளார்.4 பேரையும் என்கவுண்டர் செய்த செய்தியானது நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் மிகவும் பேசப்படும் ஒன்றாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
தவறு செய்தால் நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்பதை இந்த சம்பவம் ஒருமுறை நிரூபித்து காட்டியுள்ளது.