இந்தியா

ஹத்ராஸ் சம்பவத்தைத் தொடர்ந்து மேலும் ஒரு கொடூர சம்பவம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உத்தரபிரதேசத்தில் வன்முறைகள் பல நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது.சமீபத்தில் தான் இரு தலித் பெண்கள் வெவ்வேறு காரணங்களுக்காக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

அதிலும் ஹத்ராஸ் பகுதியை சேர்ந்த பெண் நாக்கு அறுக்கப்பட்டு முதுகு எலும்புகள், கை கால் எலும்புகள் உடைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். போலீசார் உடலை பெற்றோரிடம் கூட கொடுக்காமல் இரவோடு இரவாக தகனம் செய்தனர். மேலும் அந்த பெண்ணின் உடலை எரித்த பிறகு அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யபப்டவில்லை எனவும் மூத்த காவலர் பேட்டி அளித்தார். 

இதற்கு ராகுல்காந்தி போன்ற தலைவர்கள் நேரில் செல்ல முற்படும் போதும் தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டு பெரும் சர்ச்சையாக மாறியது.இந்த சம்பவே முடிவுக்கு வராத நிலையில் மற்றொரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

ALSO READ  உயிருடன் இருக்கும் பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்:

டெகத் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நிலத்தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டு தரிசு நிலங்களில் அவரது உடல் பாகங்கள் வீசப்பட்டுள்ளது. அந்த உடலை அங்குள்ள காட்டு மிருகங்கள் வேட்டையாடியதில் பல உடல் பாகங்கள் சிதைக்கப்பட்டுள்ளது. 

அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக அவரது உறவினர்கள் குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளனர். போலீசார் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அனைத்து காவல் நிலையங்களிலும் கூடுதல் பெண் காவலர்கள் நியமிக்க ஒன்றிய அரசு உத்தரவு

News Editor

Bahsegel spor bahisleri145 (3)

Shobika

ஒரு மீமுக்கு போரா? சண்டைக்கு அழைத்த அண்டர்டேகர்; சமாளித்த அக்‌ஷய்குமார்!

naveen santhakumar