ஏர் இந்தியா நிறுவனம் மே 4-ம் தேதி முதல் விமானங்களில் உள்நாட்டு பயணம் மேற்கொள்வதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. அதேபோல ஜூன் 1-ம் தேதி முதல் சர்வதேச பயணம் செய்வதற்கான முன்பதிவையும் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆனால் வைரஸ் பரவல் அதிகமானதால் மே மூன்றாம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 25 முதல் மே 3 வரை மொத்தமாக நாற்பது நாட்களுக்கு முழு அளவிலான ஊரடங்கு படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் காலக்கட்டத்தில் சாலை வழி வாகனப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து ஆகியனவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஊரடங்குக்கு முன்பே சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மே நான்காம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களிலும், ஜூன் ஒன்றாம் தேதி முதல் பன்னாட்டு விமானங்களிலும் பயணம் செய்வதற்கான முன்பதிவை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது.
மேலும் மேலும் விபரங்களுக்கு : http://www.airindia.in/