இந்தியா

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம்…. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.


1994 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்ற இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். நேர்மையான அதிகாரி என மக்கள் மத்தியில் பெயர் பெற்றவர், அமுதா ஐ.ஏ.எஸ். தனது சிவில் சர்வீஸ் பணியில் தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையராகப் பணியாற்றிவந்துள்ளார். 

ALSO READ  கிரிக்கெட் வீரர் யாஷ்பால் ஷர்மா காலமானார்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகிய மூவரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை விரைவாகவும் பொறுப்பாகவும் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம்-சீனாவிற்கு இந்தியா கடும் கண்டனம்....

அமுதா ஐ.ஏ.எஸ் மட்டுமல்லாமல் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பலதுறைகளில் இணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Pin Up Az Bahis Şirkəti Haqqınd

Shobika

உலகின் உயரமான அம்பேத்கர் சிலை திறப்பு!

Shanthi

பிரபல இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவிற்கு மாரடைப்பு:

naveen santhakumar