இந்தியா

அலட்சியப் போக்கால் தங்க நகைகளை குப்பையில் வீசிய பெண் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புனே :

புனேவில் தீபாவளிக்காக வீட்டை சுத்தம் செய்த பெண் ஒருவர் தனது நகைகளைக் குப்பையில் வீசியுள்ளார். 

தீபாவளிக்காக வீட்டை சுத்தம் செய்த போது தேவையில்லாத பழைய பொருட்களை எல்லாம் கழித்துள்ளார் ரேகா என்ற பெண். அப்போது தனது பழைய ஹேண்ட்பேக் ஒன்றையும் குப்பையோடு சேர்த்து குப்பையாக குப்பை லாரியில் போட்டுள்ளார். 

ALSO READ  மூன்று மாதங்களாக ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜாக் மா :

ஆனால் சிறிது நேரத்துக்குப் பின்னரே அந்த ஹேண்ட்பேக்கில் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தது அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது.இதன் பின்னர் அவர் புனே மாநகராட்சிக்கு தொடர்பு கொண்டு நடந்ததை கூறினார்.

அவர்கள் அந்த பகுதிக்கு வந்து சென்ற லாரியை வைத்து அது எந்த குப்பைக் கிடங்குக்கு சென்றிருக்கும் கணித்து அங்கு சென்று தேடியுள்ளனர்.நீண்ட நேர தேடலுக்குப் பின் அந்த ஹேண்ட்பேக் கிடைத்துள்ளது. இதையடுத்து ரேகா புனே மாநகராட்சிக்கு நன்றி சொல்லியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெண்களின் பாதுகாப்புக்காக லிப்ஸ்டிக் துப்பாக்கி

Admin

ஓடும் ரயிலில் டிக்டாக் எடுத்த இளைஞர்… காத்திருந்த ஆபத்து

Admin

சாதிமறுப்பு திருமண சான்று; மதம் மாறியவர்களுக்கு கிடையாது: உயர்நீதிமன்றம்

naveen santhakumar